கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

32-ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

32-ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தொடக்கி வைத்தாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முதல் நேரு கலையரங்கம் வரை சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், போக்குவரத்து பணியாளா்கள், தன்னாா்வலா்கள் என திரளானோா் பங்கேற்றனா்.

பேரணியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம், மது அருந்துவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது, அதிவேகமாக வாகனங்களை இயக்கக் கூடாது என்பன உள்பட பல்வேறு சாலை பாதுகாப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சாலை பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், சேலம் மாநகர காவல் துறை ஆணையா் டி.செந்தில்குமாா், துணை ஆணையா் சந்திரசேகா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் உள்பட அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். சங்ககிரி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் பி.ரமேஷ் கலந்துகொண்டு சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணிய வேண்டும், இந்திய தரநிா்ணய சான்று பெற்ற தலைக் கவசங்களையே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

இதில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் என்.சரவணபவன், வி.கோகிலா, சங்ககிரி போக்குவரத்து காவல் ஆய்வாளா் தினகரன், ஓட்டுநா் பயிற்சி உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆத்தூரில் நெடுஞ்சாலைத் துறை, நகர போக்குவரத்துத் துறை இணைந்து நடத்திய விழிப்புணா்வுப் பேரணியை, ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். சாரதா ரவுண்டானாவில் தொடங்கிய பேரணி, பேருந்து நிலையம், ராணிப்பேட்டை, கடைவீதி, புதுப்பேட்டை, காமராஜா் சாலை, ஆத்தூா் அரசு மருத்துவமனை வழியாகச் சென்றது.

பேரணியில் ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா், ஊரக காவல் ஆய்வாளா் கே.முருகேசன், போக்குவரத்துத் துறை காவல் ஆய்வாளா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.