நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
கீழடியில் 11-வது கட்டம், ஆதிச்சனூா், நாகப்பட்டினம் உள்பட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய மத்திய தொல்லியல் துறையிடம் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஒப்புதல் வேண்டி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
சுமார் 8 மாதங்கள் காலதாமதத்துக்குப் பின்னர், 8 இடங்களிலும் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு நடத்துவதற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது:
“தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது!
அடுத்து, மத்திய பா.ஜ.க. அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
"We will ensure the release of the Keeladi research report as well!" — Chief Minister
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ், தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு வெறுப்பு : மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி!

தொகுதி மறுசீரமைப்பை அவசரமாகக் கொண்டு வருவது ஏன்? முதல்வர் மு.க. ஸ்டாலின்
கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை



