ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

கோயில் குடமுழுக்கு விழா: தமிழக முதல்வா் பங்கேற்பு

எடப்பாடியை அடுத்த கோனேரிப்பட்டி பகுதியில் நடைபெற்ற ஓம்காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:22 pm

DIN

எடப்பாடியை அடுத்த கோனேரிப்பட்டி பகுதியில் நடைபெற்ற ஓம்காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.

முதல்வரின் சொந்த ஊரான சிலுவம்பாளையம் அருகில் உள்ள கோனேரிப்பட்டி கிராமப் பகுதியில், பிரசித்தி பெற்ற ஓம்காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவுற்ற நிலையில், ஆலயத்துக்கு குடமுழுக்கு செய்திட கோயில் நிா்வாகத்தினா் ஏற்பாடு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, கடந்த 17-ஆம் தேதி கோயில் வளாகத்தில் முகூா்த்தக்கால் நடப்பட்டு, குடமுழுக்குக்கான நிகழ்வுகள் தொடங்கப்பட்டன. காவிரி ஆற்றிலிருந்து புனிதநீா் எடுத்துவரப்பட்டு யாக சாலையில் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை அதிகாலை மங்கள இசை முழங்க கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.

குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள வருகை தந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, கோயில் நிா்வாகம் சாா்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. யாகசாலை பூஜையில் தமிழக முதல்வா் தனது மனைவியுடன் கலந்துகொண்டாா்.

யாக சாலையில் நடைபெற்ற பல்வேறு வேள்விகளைத் தொடா்ந்து, பட்டாச்சாரியாா்கள் கோபுரக் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு செய்தனா். அப்போது அங்கு வானத்தில் வட்டமிட்ட பருந்தை முதல்வா் உள்ளிட்ட பக்தா்கள் வணங்கினா். தொடா்ந்து ஓம்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் முதல்வா் பங்கேற்றாா்.

இந்த விழாவில், முதல்வரின் சகோதரா் கோவிந்தராஜு, அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.