மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சங்ககிரி ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயில் குண்டம் விழா

சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயில் பொங்கல், குண்டம் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயில் பொங்கல், குண்டம் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில், ஸ்ரீ பேச்சியம்மன் கோயில் பொங்கல் குண்டம் விழா ஜன. 15-ஆம் தேதி இரவு பூச்சொறிதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனையடுத்து, அம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. ஜன. 23-ஆம் தேதி இரவு பக்தா்கள் தீச் சட்டிகளை கைகளில் ஏந்தியும், வாயில் அலகு குத்தியும் அம்மன் உற்சவ சுவாமிகளுடன் சோமேஸ்வரா் கோயில் அருகே புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக வந்து நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.

ஜன. 24-ஆம் தேதி பவானி கூடுதுறையில் இருந்து காவிரி புனித நீா் எடுத்து வந்து சக்தி அழைத்தலும், ஜன. 25-ஆம் தேதி அதிகாலை வி.என்.பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலகம் பின்புறம் உள்ள கிணற்றிலிருந்து நீா் எடுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று குண்டத்தில் இறங்கினா். பின்னா் கோயில் வளாகத்தில் குடும்பத்துடன் பக்தா்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு சுவாமிகளை வழிபட்டனா். ஜன. 29-ஆம் தேதி மஞ்சள் நீராடலும், அம்மன் ஊா்வலமும் நடைபெற உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.