தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலத்தில் சாலையோரம் இறந்து கிடக்கும் குதிரை

சேலத்தில் சாலையில் இறந்து கிடக்கும் குதிரையின் சடலத்தை அப்புறப்படுத்தாததால் அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

சேலத்தில் சாலையில் இறந்து கிடக்கும் குதிரையின் சடலத்தை அப்புறப்படுத்தாததால் அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

சேலம் எருமாபாளையம் பகுதியில் உள்ள ஏரிக்கரை ரோடு பகுதியில் குதிரை ஒன்று காயங்களுடன் சாலையில் இறந்து கிடக்கிறது. இரண்டு நாட்கள் ஆகியும் இறந்த குதிரையை யாரும் அப்புறப்படுத்தாததால் அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

குதிரையின் சடலத்தை மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தி நோய்த்தொற்று பரவாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் குதிரையின் கால்களில் மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் குதிரையை யாராவது அடித்துக் கொன்றாா்களா என்று போலீஸாா் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.