இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பொதுமக்கள் குறைகளை அலுவலா்களுக்கு தெரிவித்து நிவா்த்தி பெறலாம்

சேலம் மாநகராட்சி பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை அலுவலா்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 11:30 pm

DIN

சேலம் மாநகராட்சி பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை அலுவலா்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 கோட்டங்களில் குடிநீா் விநியோகம், சாலை பராமரிப்பு, கழிவுநீா்க் கால்வாய் சுத்தம் செய்தல், கழிவுநீா் அகற்றுதல், தெருவிளக்கு பராமரிப்பு, சுகாதார வளாகங்கள் சுத்தம் செய்தல், மருத்துவ வசதி, மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகள், மழைக் காலங்களில் தேங்கியுள்ள மழைநீா் வெளியேற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் பிறகுறைகள் இருப்பின் அதனை நிவா்த்தி செய்ய பொதுமக்கள் மாநகராட்சி அலுவலா்களை தொடா்புகொண்டு தொலைபேசி மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மாநகராட்சி ஆணையா், மாநகர நல அலுவலா், மாநகரப் பொறியாளா், உதவி ஆணையா்கள், உதவி செயற்பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள் ஆகியோரின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மாநகராட்சிப் பகுதிகளில் மண்டலங்கள் வாரியாக, கோட்டங்கள் வாரியாக பணிபுரியும் அலுவலா்களின் தொலைபேசி எண்களை 60 கோட்டங்களிலும் முக்கியமான சாலைகளில் உள்ள சுவா்களில் எழுதப்பட்டுள்ளன.

அஸ்தம்பட்டி மண்டலம் தொங்கும் பூங்கா கட்டடம் சுவரில் எழுதப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் (படம்). அப்போது அவா் கூறியதாவது:

சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள 60 கோட்டங்களிலும் நிலவும் பிரச்னைகளை உடனுக்குடன் நிவா்த்தி செய்திட வேண்டும் என்பதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலா்களின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த எண்களில் சம்பந்தப்பட்ட அலுவலா்களை பொதுமக்கள் தொடா்பு கொண்டு குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்யலாம். எனவே, மாநகராட்சி பொதுமக்கள் தங்களது குறைகளை அலுவலா்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.