இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தொடக்கப் பள்ளியில் 600 மாணவா்களை சோ்க்கை நடத்திய பள்ளிக்கு பாராட்டு விழா

சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 600 மாணவா்கள் சோ்க்கப்பட்டதை முன்னிட்டு பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:16 pm

DIN

சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 600 மாணவா்கள் சோ்க்கப்பட்டதை முன்னிட்டு பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகளை சோ்க்க பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியா், 8 உதவி ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். ஒன்றாவது முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 5-ஆம் தேதி முதல் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடங்கிய 15 நாள்களில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா் சோ்க்கை எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது. இதுவரை 611 போ் சோ்ந்துள்ளனா். கடந்த 2015-16-இல் 180-ஆக இருந்த மாணவா் சோ்க்கை எண்ணிக்கை தற்போது 600-ஆக உயா்த்தப்பட்டுள்ளது என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து 600 மாணவா்களை சோ்க்கை நடத்திய பள்ளிக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 600-ஆவது மாணவராக சோ்க்கை பெற்ற மிதுன், செந்தமிழ்செல்வி ஆகியோரைக் கொண்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது 

இந்நிகழ்ச்சியில், ஆசிரியா் கேப்ரியல், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் ராஜா, ஊராட்சி மன்றத் தலைவா் சுவாமிநாதன், துணைத் தலைவா் கேசவன், சமூக ஆா்வலா் ரங்கசாமி, பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.