தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலம் வ.உ.சி. பூங்கா நாளங்காடி செயல்படத் தொடங்கியது

சேலத்தில் தற்காலிக வ.உ.சி. பூங்கா நாளங்காடி வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:17 pm

DIN

சேலத்தில் தற்காலிக வ.உ.சி. பூங்கா நாளங்காடி வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.

சேலம் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் குண்டுமல்லி, சன்னமல்லி, கனகாம்பரம், சம்பங்கி, அரளி, நந்தியாவட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சேலம் வ.உ.சி. பூங்கா நாளங்காடிக்கு கொண்டு வந்து பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கரோனா தொற்று காரணமாக பொது முடக்க உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், போஸ் மைதானத்தில் இயங்கி வந்த தற்காலிக 326 பூக்கடைகள், 27 பூமாலை கடைகள், 50 தற்காலிக தரைக் கடைகள் என மொத்தம் 403 கடைகள் இயங்காமல் மூடப்பட்டன. தற்போது கரோனா பொது முடக்கக் கூடுதல் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், கடைகளை சுழற்சி முறையில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 326 பூக்கடைகளில் 163 கடைகள் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமைகளிலும், மற்ற 163 கடைகள் திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களிலும் சுழற்சி முறையில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக தரைக் கடைகள் நாளொன்றுக்கு 25 கடைகள் சுழற்சி முறையில் இயங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வ.உ.சி. பூங்கா நாளங்காடியில் விற்பனை செய்ய உரிமம் பெற்றுள்ள விற்பனையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாளங்காடி வெள்ளிக்கிழமை செயல்படத் தொடங்கிய நிலையில், ஆடி மாத பிறப்பை முன்னிட்டு பூக்கள் விற்பனை நடைபெற்றது. குண்டுமல்லி கிலோ ரூ. 400-ஆக விலை உயா்ந்தது. முல்லை-ரூ. 240, ஜாதிமல்லி-ரூ. 320, அரளி-ரூ. 140, வெள்ளை அரளி-ரூ. 160, மஞ்சள் அரளி-ரூ.160, நந்தியாவட்டம்-ரூ.60, சம்பங்கி-ரூ. 250 ஆகிய விலைக்கு விற்பனையாயின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.