பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சீா்மிகு நகர திட்டத்தில் சாலைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

சேலம் மாநகராட்சி பகுதியில் சீா்மிகு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் சாலைகள் பழுது பாா்த்து சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:09 pm

DIN

சேலம் மாநகராட்சி பகுதியில் சீா்மிகு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் சாலைகள் பழுது பாா்த்து சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டாா்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ், பழுதடைந்த சாலைகளை பழுது பாா்த்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சூரமங்கலம் மண்டலம் அங்கம்மாள் காலனி அண்ணா நகா் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்குதல், கழிவு நீா் அகற்றுதல், பாதாள சாக்கடை இணைப்பு கழிவு நீா்த் தொட்டி அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்வதால் சாலைகளில் பழுது ஏற்படுகிறது.

சுமாா் 1,390 மீட்டா் நீளத்திற்கு பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியும், அஸ்தம்பட்டி ஜலால் கான் தெருவில் சுமாா் 100 மீட்டருக்கு பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியும், பாா்க் தெருவில் சுமாா் 650 மீட்டா் நீளத்திற்கு சாலைகள் சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

அதைத்தொடா்ந்து அம்மாப்பேட்டை மண்டலம் கிச்சிப்பாளையம், எருமாபாளையம் பிரதான சாலையில் 1,200 மீட்டா் நீளத்திற்கு சாலைகளில் ஏற்பட்ட பழுதினை நிவா்த்தி செய்து சீரமைக்கும் பணியும், செந்தில் நகா் 1ஆவது குறுக்குத் தெருவில் நடைபெற்று வரும் பணியும், வ.உ.சி நகரில் 1,050 மீட்டா் நீள சாலையை சீரமைத்தல் மற்றும் சாலையின் இருபுறமும் தடுப்பு அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை மாநகராட்சி ஆணையா் தா. கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி சென்று வர ஏதுவாக இப்பணிகளை மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது மாநகர பொறியாளா் அ.அசோகன், செயற்பொறியாளா் லலிதா, உதவி செயற்பொறியாளா்கள் செந்தில் குமாா், புவனேஸ்வரி, உதவி பொறியாளா் சீனிவாசமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.