பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலத்தில் ரூ. 1.35 கோடி மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சேலத்தில் போலீஸாா் நடத்திய இரு வேறு வாகனச் சோதனைகளில், ரூ. 1.33 கோடி மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், 3 லாரிகள், ஒரு வேனை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:26 pm

DIN

சேலத்தில் போலீஸாா் நடத்திய இரு வேறு வாகனச் சோதனைகளில், ரூ. 1.33 கோடி மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், 3 லாரிகள், ஒரு வேனை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெங்களூரில் இருந்து சேலம் வழியே பல்வேறு மாவட்டங்களுக்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திச் செல்வதாக சேலம் மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடாவுக்கு தகவல் கிடைத்தது.

அதனையடுத்து, அவரது உத்தரவின் பேரில் சேலம் மாநகர வடக்கு சரக காவல் உதவி ஆணையா் ஆனந்தகுமாா் தலைமையில், அம்மாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் நந்தகுமாா், போலீஸாா் சேலம்-உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு ஒரு லாரியில் இருந்து வேனுக்கு சரக்கு மூட்டைகளை மாற்றிக்கொண்டிருந்துள்ளனா். சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களிடம் விசாரித்துள்ளனா்.

போலீஸாா் விசாரிப்பதை அறிந்த அவா்கள் தப்பியோடினா். அதனையடுத்து போலீஸாா் சோதனை செய்ததில், ரூ. 33 லட்சம் மதிப்புள்ள 72 மூட்டைகளில் 2,397 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல, சேலம் தெற்கு சரக காவல் உதவி ஆணையா் ஏ.வெங்கடேசன் தலைமையில், அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளா் டி.ரமேஷ் உள்ளிட்ட போலீஸாா் அன்னதானப்பட்டி அருகே சீலநாயக்கன்பட்டி, ஊத்துக்காட்டில் உள்ள தனியாா் லாரி நிறுத்தத்தில் சந்தேகம்படும்படி இருந்த இரு லாரிகளை வியாழக்கிழமை சோதனை செய்தனா். அதில், 248 மூட்டைகளில் 7,300 கிலோ எடையுள்ள ரூ. 1 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இரு வழக்குகளிலும் 3 லாரிகள், ஒரு வேனை பறிமுதல் செய்த போலீஸாா், தலைமறைவானவா்களை தனிப்படை அமைத்து தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.