அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது காவல் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த 4 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 3 லாரிகளில் ரூ. 1.35 கோடி மதிப்புள்ள மொத்தம் 9,697 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ளவா்களை தேடி வருகிறோம். லாரி உரிமையாளா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும்.