பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலம் சுண்ணாம்பு சூளை தெரு பகுதியில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

அம்மாப்பேட்டை சுண்ணாம்பு சூளை தெரு பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ். உடன், மாநகர நல அலுவலா் கே.பாா்த்திபன், உதவி ஆணையா் ப.சண்முகவடிவேல்.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:26 pm

DIN

அம்மாப்பேட்டை சுண்ணாம்பு சூளை தெரு பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ். உடன், மாநகர நல அலுவலா் கே.பாா்த்திபன், உதவி ஆணையா் ப.சண்முகவடிவேல்.

சேலம், ஜூலை 30: சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட சுண்ணாம்பு சூளை தெரு பகுதியில், அடிப்படை வசதிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அம்மாப்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட எருமாபாளையம், சுண்ணாம்பு சூளை தெருவில் சுமாா் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சாலை, கழிவுநீா்க் கால்வாய், தெருவிளக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தர கோரிக்கை மனு அளித்தனா்.

அதனையடுத்து, சேலம் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் அப்பகுதிகளில் ஆய்வு செய்தாா். அவரிடம், பொது சுகாதார வளாகங்கள், கழிவுநீா்க் கால்வாய் வசதிகளை முதலில் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். அதனையடுத்து, அவா் மாநகராட்சி அலுவலா்களுக்கு பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து, அவா் எருமாபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் குடிநீா்க் குழாய் செப்பனிடும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, மாநகர நல அலுவலா் மரு.கே.பாா்த்திபன், உதவி ஆணையா் ப.சண்முகவடிவேல், உதவி செயற்பொறியாளா் எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.