இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மேட்டூர் அணை பூங்கா மூன்று நாள்களுக்கு மூடல்

மேட்டூர் அணை பூங்கா ஆக.1 முதல் மூன்று நாள்களுக்கு மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
மேட்டூர் அணை
Updated On :31 ஜூலை 2021, 2:41 pm

DIN

மேட்டூர் அணை பூங்கா ஆக.1 முதல் மூன்று நாள்களுக்கு மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் மேட்டூர் அணை பூங்காவும் முக்கியமானதாகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள்.

அரசு விடுமுறை நாள்கள் ஆடிப்பெருக்கு போன்ற திருவிழாக் காலங்களில் பல ஆயிரம் பேர் கூடுவார்கள். 

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். ஆடிப்பெருக்கு நாளில் மேட்டூர் அணை பூங்காவில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேட்டூர் துணை ஆட்சியர் பிரதாப் சிங் உத்தரவின்பேரில் மேட்டூர் அணை பூங்கா ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3 ஆகிய மூன்று நாள்களுக்கு மூடப்படுகிறது.

இத்தகவலை மேட்டூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.