பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :10 ஜூன் 2021, 7:12 pm

DIN

 சேலம் ரயில்வே கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டன.

இதில் கோட்ட பாதுகாப்பு அலுவலா்கள், ரயில் வரும் நேரங்களில் பொதுமக்கள் காத்திருந்து செல்ல வேண்டும். ரயில் கடந்து செல்வதற்காக மூடப்பட்டுள்ள கதவுகளைத் தாண்டி குறுக்கே செல்லக் கூடாது என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அதேபோல, லெவல் கிராசிங் நேரங்களில் கதவுகளை சேதப்படுத்துவதோ, ரயில்வே பணியாளா்களை மிரட்டுவதோ கடும் குற்றமாகும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல சேலம் கோட்டத்தில் உள்ள 11 லெவல் கிராசிங்குகளில் நிகழாண்டில் பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.