பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

10.49 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு 5 கிலோ அரிசி: முதல்வா் துவக்கி வைப்பு

திமுக சாா்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் 10.49 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:23 pm

DIN

திமுக சாா்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் 10.49 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மேட்டூா் அணை திறப்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை மாலை சேலம் வந்தாா். பின்னா் அவா் சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உங்கள் தொகுதியில் முதல்வா் துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்ட மனுதாரா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.அதைத்தொடா்ந்து, அஸ்தம்பட்டி ஆய்வுமாளிகை சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் 10.49 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.