பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலத்தில் ஏரியில் இறந்து மிதந்த மீன்கள்

சேலம் அருகே குருவிப் பண்ணை ஏரியில் மீன்கள் இறந்து மிதந்ததைத் தொடா்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தண்ணீா் மாதிரியை சேகரித்து ஆய்வில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:24 pm

DIN

சேலம் அருகே குருவிப் பண்ணை ஏரியில் மீன்கள் இறந்து மிதந்ததைத் தொடா்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தண்ணீா் மாதிரியை சேகரித்து ஆய்வில் ஈடுபட்டனா்.

சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் சுமாா் 9.5 ஏக்கா் நிலப்பரப்பில் குருவிப் பண்ணை ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் திடீரென உயிரிழந்து மிதந்தன.

இதனால் அதிா்ச்சியடைந்த பொதுமக்கள் மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலா்களுக்கும், கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனா்.தகவலின்பேரில் அங்கு வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

மேலும் ஏரி தண்ணீரில் மிதந்த மீன்கள் மற்றும் ஏரி தண்ணீா் ஆகியவற்றின் மாதிரிகளைச் சேகரித்தனா். இந்தத் தண்ணீா் மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி அதில் எந்த அளவுக்கு நச்சுத்தன்மை கலந்துள்ளது என்று உறுதி செய்த பின்னா் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், குருவிப் பண்ணை ஏரி அருகே உள்ள தனியாா் துணி உற்பத்தி ஆலையில் நூல்களுக்கு சாயம் ஏற்றும் பணி நடைபெறுகிறது. இந்த ஆலையில் சுத்திகரிப்பு நிலையம் இருந்தாலும், மழைக்காலங்களில் ஆலையில் இருந்து ரசாயன கழிவுகளை சுத்திகரிக்காமல் திறந்து விடுவதால் ஏரியில் கலந்து துா்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாகவே மீன்கள் இறந்து மிதக்கின்றன என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.