அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வாழப்பாடி அருகே கணவர் அடித்துக் கொலை: அரசுப்பள்ளி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்

வாழப்பாடி அருகே கணவரை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்த அரசுப்பள்ளி ஆசிரியை மீது, நடிவடிக்கை எடுக்க வலியுறுத்தி கணவரின் உறவினர்கள் திங்கட்கிழமை காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப

News image
Updated On :2 ஆகஸ்ட் 2021, 5:39 am

DIN

வாழப்பாடி அருகே கணவரை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்த அரசுப்பள்ளி ஆசிரியை மீது, நடிவடிக்கை எடுக்க வலியுறுத்தி கணவரின் உறவினர்கள் திங்கட்கிழமை காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த அத்தனுார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி சித்தன் மகன் மணிகண்டன் (35). இவர், 11 ஆண்டுகளுக்கு முன் பேளூரைச் சேர்ந்த இளமதி (30). என்பவரை காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இளமதி, வாழப்பாடி அடுத்த வி.மன்னார்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியருக்கு தக்சித்(10) என்ற மகனும், ஹக்சிதா (6) என்ற மகளும் உள்ளனர்.

Story image

சென்னையில் பூம்புகார்  நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மணிகண்டன், பணி நீக்கம் செய்யப்பட்டதால் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். அடிக்கடி மது  போதையில் வீட்டிற்கு சென்று மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.  இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை குடிபோதையில் சென்ற மணிகண்டன்,  மனைவி இளமதியிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஆசிரியை இளமதி, தனது கணவர் மணிகண்டனை, உருட்டுக் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Story image

மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடக்கும் புகைப்படங்கள், சமூக 
ஊடகங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளர் சுகுமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டனின் மனைவியான அரசுப்பள்ளி ஆசிரியை இளமதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட  கணவரை அரசுப்பள்ளி ஆசிரியை கட்டையால் அடித்து கொலை செய்ததாக பரவிய தகவல், இப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கணவரை அடித்துக் கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியை எழம் அறிவு வாழப்பாடி போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மணிகண்டனின் உறவினர்கள் திங்கள்கிழமை காலை அத்தனூர்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வாழப்பாடி பேளூர் பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வாழப்பாடி போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் மறியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.