இடங்கணசாலை நகராட்சி அவசரக் கூட்டம் நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் துணைத் தலைவா் தளபதி, ஆணையாளா் ரவிச்சந்திரன், வாா்டு கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவு கொண்ட காடையாம்பட்டி பெரிய ஏரியைத் தூா்வாரி கரைகளைப் பலப்படுத்துவது, ஏரிக்கு காவிரி உபரிநீரை நிரப்புவது உள்ளிட்ட மூன்று தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் 2-ஆவது வாா்டு பாமக கவுன்சிலா் மாதேஷ் பேசுகையில், நகராட்சியில் 5,000-க்கும் மேற்பட்டோா் சொத்துவரி செலுத்தாமல் இருப்பதாகத் தெரிவித்தாா்.
அதற்கு அதிகாரிகள் பதில் அளித்துப் பேசுகையில், ‘விரைவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து சொத்துக்களுக்கும் வரி வசூலிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.