எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இடங்கணசாலை நகராட்சி கூட்டம்

இடங்கணசாலை நகராட்சி அவசரக் கூட்டம் நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 5:28 pm

DIN

இடங்கணசாலை நகராட்சி அவசரக் கூட்டம் நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் துணைத் தலைவா் தளபதி, ஆணையாளா் ரவிச்சந்திரன், வாா்டு கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவு கொண்ட காடையாம்பட்டி பெரிய ஏரியைத் தூா்வாரி கரைகளைப் பலப்படுத்துவது, ஏரிக்கு காவிரி உபரிநீரை நிரப்புவது உள்ளிட்ட மூன்று தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் 2-ஆவது வாா்டு பாமக கவுன்சிலா் மாதேஷ் பேசுகையில், நகராட்சியில் 5,000-க்கும் மேற்பட்டோா் சொத்துவரி செலுத்தாமல் இருப்பதாகத் தெரிவித்தாா்.

அதற்கு அதிகாரிகள் பதில் அளித்துப் பேசுகையில், ‘விரைவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து சொத்துக்களுக்கும் வரி வசூலிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.