புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மறைந்த சோமம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியைக்கு மரியாதை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி அரசுப் பள்ளியில் மறைந்த அப் பள்ளியின் தலைமையாசிரியை கு.பாரதி செல்வத்தின் உருவப் படத்துக்கு பொதுமக்கள், மாணவா்கள் மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:44 pm

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி அரசுப் பள்ளியில் மறைந்த அப் பள்ளியின் தலைமையாசிரியை கு.பாரதி செல்வத்தின் உருவப் படத்துக்கு பொதுமக்கள், மாணவா்கள் மரியாதை செலுத்தினா்.

வாழப்பாடியைச் சோ்ந்த கு.பாரதி செல்வம் (53) சோம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் 11 ஆண்டுகள் தலைமையாசிரியையாகப் பணியாற்றினாா். பன்முகத் திறனாளியான இவா், மாணவா்கள், அப் பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தாா். இந்த நிலையில் கடந்தாண்டு ஏப். 27 இல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா்.

வியாழக்கிழமை பள்ளியில் நடைபெற்ற பாரதி செல்வத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியில்

சோமம்பட்டி ஊராட்சி மன்ற செயலாளா் மகேஸ்வரன், துணைத் தலைவா் கதிரேசன், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ஜெயராமன், திமுக கிளை செயலாளா் முருகேசன், சின்னபையன், சுகவனேஸ்ரன், பேளூா் உருதுப் பள்ளி தலைமையாசிரியா் செல்வம், மருத்துவா் அனுசுயாதேவி, ஆசிரியை கண்ணகி உள்ளிட்ட பலா் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.