133 மூன்று ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோட்டை மேம்பாலத்தை பெரிய இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி நடைபெறுகிறது.
133 மூன்று ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோட்டை மேம்பாலத்தை பெரிய இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி நடைபெறுகிறது.

சேலம்: ஆத்தூர் கோட்டையில் 12 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் 

சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதுமட்டுமன்றி இவ்வழியாக முல்லைவாடி, துலுக்கனூர், கல்லாநத்தம், முட்டல், உப்போடை  மற்றும் வடக்கு காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளன,         

இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கருங்கற்களால் மிகப்பெரிய தூண்கள் அமைத்து 9 கண் கொண்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டது. மேலும் 1972 இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5 இரும்பு பாலங்கள் அடித்துச் சென்றன. அதே ஆண்டில் பழைய பாலத்துடன் இணைத்த 13 கண் கொண்ட பாலமாக விரிவாக்கம் செய்து மறு சீரமைக்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது மேற்புற தல காங்கிரீட் தூண்களில் அதிகளவில் விரிசல் ஏற்பட்டு தடுப்பு கட்டைகள் பெரும்பாலும் வெடித்து சேதமடைந்தன. இதனால் மேம்பாலம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் புதிதாக மேம்பாலம் அமைக்க 2020-21 ஆம் ஆண்டில் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பாலம் கட்டுமான பணி தொடங்கி, அதனருகே வசிஷ்ட நதியில் தற்காலிக தரைப்பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், 133 மூன்று ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோட்டை மேம்பாலத்தை பெரிய இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி இன்று முதல் தொடங்கியது. 

மேலும், அங்கு அமைக்கப்பட்ட தற்காலிக மாற்றுப்பாதையில் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com