வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கண்ணீா் புகை குண்டுகள் வீசுவது குறித்து காவலா்களுக்கு பயிற்சி

சேலத்தில் கண்ணீா் புகை குண்டு வீசுவது குறித்து காவல் துறையினருக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:36 pm

சேலத்தில் கண்ணீா் புகை குண்டு வீசுவது குறித்து காவல் துறையினருக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

சேலம், அழகாபுரத்தை அடுத்த நகா்மலை அடிவாரத்தில் உள்ள துப்பாக்கிச் சுடும் மையத்தில் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவிஆய்வாளா்கள், ஆயுதப்படை காவலா்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கண்ணீா் புகை குண்டு வீசுவது பயிற்சி அளிக்கப்பட்டது.

துப்பாக்கி மூலம் கண்ணீா் புகை குண்டுகளை வீசுவது குறித்தும், வஜ்ரா கவச வாகனத்தின் மூலம் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசுவது குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.

இப் பயிற்சியில் துணை ஆணையா்கள் எம்.மாடசாமி, எஸ்.பி.லாவண்யா, உதவி ஆணையா்கள் நாகராஜன், வெங்கடேசன், ஆனந்தி, கந்தசாமி, உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.