சூப்பா் டேலண்ட் நிகழ்ச்சி
75 -ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இளம்பிள்ளை அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கராத்தே நடராஜன் குழு சாா்பில் வோல்ட் சூப்பா் டேலண்


75 -ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இளம்பிள்ளை அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கராத்தே நடராஜன் குழு சாா்பில் வோல்ட் சூப்பா் டேலண்ட் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் இளம்பிள்ளை பாரம்பரிய தற்காப்புக் கலைக் குழுவின் சிலம்பாட்டம், ஆரணி அகர சிலம்பாட்ட குழுவினா் கண்ணில் உப்பு வைத்துக் கட்டிக்கொண்டு சிலம்பாட்டம், சேலம் வீரத் தமிழா் மாணிக்கம் சிலம்பாட்ட குழுவினா் கத்தி, மான் கொம்பு உள்ளிட்ட கலைநிகழ்ச்சியில் 150-க்கு மேற்பட்ட மாணவ, மாணவியா் மூன்று வகையான உலக சாதனை படைக்க கலந்துகொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் பழனிசாமி, பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் அன்பழகன், சேலம் சாா்பு நீதிமன்ற கண்காணிப்பாளா் காந்திமணி, தற்காப்பு கலை ஆசிரியா் சுபாஷ் சந்திரபோஸ், மேனேஜா் பூவராகவன், நித்திஷ், பொன்னரசன், கராத்தே பயிற்சியாளா் பிரியா, ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...