எடப்பாடி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியா் அ.காா்மேகம் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியா் அ.காா்மேகம் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 வாா்டுகளில் பதிவாகும் வாக்குகள் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட உள்ள நிலையில், அம்மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள், நோற்தொற்று தடுப்பு நடவடிக்கைள் குறித்து ஆய்வு மேற்கொண்ட
மாவட்ட ஆட்சியா் ஆய்வு நடத்தினாா்.
வாக்கு எண்ணும் சமயத்தில் பின்பற்றிட வேண்டிய பல்வேறு தோ்தல் நடைமுறைகள் விதிகள் குறித்தும், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை முழு அளவில் ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
ஆய்வின்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபினவ், கோட்டாட்சியா் வேடியப்பன், தோ்தல் நடத்திடும் அலுவலா் முருகன் உள்ளிட்ட முக்கிய அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...