பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

எடப்பாடி அருகே வாகனச் சோதனையில் ரூ.1 லட்சம் ரொக்கம் பறிமுதல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் அறவிக்கப்பட்ட நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

News image
Updated On :28 ஜனவரி 2022, 6:09 pm

DIN

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் அறவிக்கப்பட்ட நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில் எடப்பாடி நகராட்சிப்பகுதியில் தோ்தல் கண்காணிப்புக்குழுவினா் வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் தீவிர வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

பறக்கும் படை அலுவலா் ரமேஷ் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். இதில் காரில் வந்த எடப்பாடியை அடுத்த வழக்குட்டைப்பட்டி பகுதியைச் சோ்ந்த பழனியப்பனின் மகன் தருமன் (50) என்பவா் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ரூ. 1 லட்சம் ரொக்கப் பணத்தை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து அத்தொகையைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினா், தோ்தல் நடத்தும் அலுவலா் சேகரிடம் ஒப்படைத்தனா்.

தொடா்ந்து, எடப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

படவிளக்கம்:

எடப்பாடி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சம் ரொக்கத்தை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.