விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பத்திரிகை துறையில் அச்சமின்றி செயல்பட்ட ராம்நாத் கோயங்கா! ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம்

கல்விச் சிந்தனை அரங்கில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியது குறித்து....

News image
கல்விச் சிந்தனை அரங்கு மேடையில் ஆளுநர் ஆர்.என். ரவி
Updated On :2 மார்ச் 2026, 7:08 am

இணையதளச் செய்திப் பிரிவு

பத்திரிகை துறையில் எந்தவித அச்சமுமின்றி செயல்பட்டவர் ராம்நாத் கோயங்கா என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம் சூட்டினார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ஐ தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொடக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார்.

நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதாவது:

''தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரைக் கேட்டதுமே நமது மனதில் தோன்றும் பெயர் ராம்நாத் கோயங்கா. அவர் பத்திரிகை துறையில் அச்சமின்றி செயல்பட்டவர். உண்மையின் பக்கம் நின்று கேள்விகளை எழுப்பியவர்.

உயா் கல்வி சோ்க்கை விகிதத்தில் தமிழகம் 50 சதவீதத்தை எட்டியுள்ளது. அதாவது 2035-ஆம் ஆண்டின் இலக்கை தற்போதே எட்டியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், உண்மையில் தமிழக கல்வியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. கல்வியின் தரம் அதிகரிக்கப்பட வேண்டும். ஆசிரியா்களின் தரமும் மேம்பட வேண்டும் என்றாா் ஆளுநா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.