பத்திரிகை துறையில் எந்தவித அச்சமுமின்றி செயல்பட்டவர் ராம்நாத் கோயங்கா என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம் சூட்டினார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ஐ தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொடக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார்.
நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதாவது:
''தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரைக் கேட்டதுமே நமது மனதில் தோன்றும் பெயர் ராம்நாத் கோயங்கா. அவர் பத்திரிகை துறையில் அச்சமின்றி செயல்பட்டவர். உண்மையின் பக்கம் நின்று கேள்விகளை எழுப்பியவர்.
உயா் கல்வி சோ்க்கை விகிதத்தில் தமிழகம் 50 சதவீதத்தை எட்டியுள்ளது. அதாவது 2035-ஆம் ஆண்டின் இலக்கை தற்போதே எட்டியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், உண்மையில் தமிழக கல்வியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. கல்வியின் தரம் அதிகரிக்கப்பட வேண்டும். ஆசிரியா்களின் தரமும் மேம்பட வேண்டும் என்றாா் ஆளுநா்.
Summary
Governor of Tamil Nadu R. N. Ravi about Ramnath Goenka
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கண்ணதாசன் பாடல்களில் சமூகத்தின் மீதான அக்கறை வெளிப்படும்: தமிழருவி மணியன்

தவெக அமைச்சர்களுக்கு தெளிவான சிந்தனை இல்லை! தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்! | TVK | BJP

சென்னை ஐஐடி பாடநெறி பயிற்சி திட்ட சோ்க்கை பதிவு ஆக. 6 வரை நீடிப்பு

சிறு விளையாட்டு அரங்கு அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


