எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

பத்திரிகை துறையில் அச்சமின்றி செயல்பட்ட ராம்நாத் கோயங்கா! ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம்

கல்விச் சிந்தனை அரங்கில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியது குறித்து....

News image
கல்விச் சிந்தனை அரங்கு மேடையில் ஆளுநர் ஆர்.என். ரவி
Updated On :2 மார்ச் 2026, 7:08 am

இணையதளச் செய்திப் பிரிவு

பத்திரிகை துறையில் எந்தவித அச்சமுமின்றி செயல்பட்டவர் ராம்நாத் கோயங்கா என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம் சூட்டினார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ஐ தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொடக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார்.

நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதாவது:

''தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரைக் கேட்டதுமே நமது மனதில் தோன்றும் பெயர் ராம்நாத் கோயங்கா. அவர் பத்திரிகை துறையில் அச்சமின்றி செயல்பட்டவர். உண்மையின் பக்கம் நின்று கேள்விகளை எழுப்பியவர்.

ஆரம்பத்திலிருந்தே வளர்ச்சியை நோக்கிய முற்போக்கு மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. மதிய உணவுத் திட்டம் இங்குதான் தொடங்கப்பட்டது.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக இந்த வளர்ச்சி நிலையான சரிவை நோக்கிச் செல்கிறது. கல்வியின் தரம் குறைந்து வருவதே இதற்கு காரணம்'' என ஆளுநர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.