போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

செய்யறிவே எதிர்காலம்! ஆளுநர் ஆர்.என். ரவி

கல்விச் சிந்தனை அரங்கில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியது பற்றி...

News image
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி
Updated On :2 மார்ச் 2026, 7:36 am

இணையதளச் செய்திப் பிரிவு

செய்யறிவு இன்றி எதிர்காலம் இல்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திங்கள்கிழமை தெரிவித்தார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ஐ தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய ஆளுநர், செய்யறிவின் எதிர்காலம் குறித்து பேசியதாவது:

”2047 - ல் வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கு தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானது. மனித நாகரிகத்தின் பயணம் தொழில்நுட்பத்தின் பின்புலத்தில்தான் உள்ளது.

எதிர்காலம் என்பது இரண்டு வகைகளாகதான் இருக்கும். ஒன்று செய்யறிவு சார்ந்ததாக இருக்கும். மற்றொன்று செய்யறிவுடன் தொடர்பில்லாததாக இருக்கும். கல்வியும் அப்படிதான் இருக்கப்போகிறது.

ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாடு வளர்ச்சியை நோக்கிய முற்போக்கு மாநிலமாக இருந்து வருகிறது. மதிய உணவுத் திட்டம் இங்குதான் தொடங்கப்பட்டது.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக இந்த வளர்ச்சி நிலையான சரிவை நோக்கிச் செல்கிறது. கல்வியின் தரம் குறைந்து வருவதே இதற்கு காரணம்” என ஆளுநர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.