வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடி

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் குறித்து பிரதமர் மோடி பேச்சு...

News image
பிரதமர் மோடி
Updated On :2 மார்ச் 2026, 8:06 am

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் கவலையளிப்பதாகவும் பேச்சுவார்த்தை மூலமாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தில்லியில் கன்னட பிரதமர் மார்க் கார்னியுடனான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி,

"உலகில் நிலவும் பல்வேறு பதற்றங்கள் நிலவும் சூழ்நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாகவே இருக்கிறது. அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணுவதற்கு நாங்கள் எப்போதும் அழைப்பு விடுத்து வருகிறோம்.

மேலும், இரண்டு ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து நிற்கும்போது அமைதிக்கான குரல் இன்னும் வலுவடைகிறது. மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மூலம் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க இந்தியா எப்போதும் ஆதரவளிக்கிறது.

உலக நாடுகளில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து நாடுகளுடனும் நாங்கள் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவோம். வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.