அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் பாதுகாப்புத் தலைவர் புதிய கோரிக்கையை வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களால் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என ஈரான் பாதுகாப்புத் தலைவர் புதிய கோரிக்கையை வைத்திருபப்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஈரான் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி, ஓமன் அமைதிப் பேச்சுவார்த்தை அமைப்புகள் மூலம் அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க புதிய முயற்சியை மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இது பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்ட அடுத்த நாளே, ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை வைத்திருப்பதாகக் கூறினார்.
அதாவது, அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள். நான் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டேன். அவர்களுடன் நான் பேச்சுவார்த்தை நடத்துவேன். இதனை அவர்கள் முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். விரைவாக அவர்களால் என்ன செய்திருக்க முடியுமோ அதனை செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதிக காலம் காத்திருந்துவிட்டனர் என்றும் டிரம்ப் குறிப்பிட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் தலைமை மதகுரு கமேனி பலி!
ஈரான் மீது, அமெரிக்க - இஸ்ரேல் படைகள் கூட்டாக நடத்திய அதிரடித் தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டாா்.
கமேனி கொலைக்குப் பழிதீா்க்க தீவிர பதிலடி தாக்குதலைத் தொடுப்போம் என்று ஈரான் சூளுரைத்திருந்த நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமையும் போா் தொடா்ந்ததால், அந்தப் பகுதிகளில் உச்சகட்ட போர் பதற்றம் நிலவும் நிலையில், பேச்சுவார்த்தைக்கான அழைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் ஏன்?
ஈரான், அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, அந்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் படைகள் கடந்த பிப். 28ஆம் தேதி வான்வழித் தாக்குதலை நடத்தி இருந்தன.
இந்த தாக்குதலின்போது, தலைநகா் டெஹ்ரானில் ஈரான் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனியின் அலுவலக வளாகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், கமேலி பலியானார்.
இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலைக் குறிவைத்தும், பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, ஈரான் எதிா் தாக்குதலை நடத்தியிருந்ததால் போர் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Summary
Iran's defense chief is reportedly trying to resume talks with the United States amid rising tensions.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!

ஈரான் தாக்கிய சில மணிநேரங்களில்! குவைத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்!
எதிரியின் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்: ஈரான்

ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தை: சீன அதிபருடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



