ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மேட்டூர் அணை: நீண்ட நாள்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழே சரியும் நீர்மட்டம்

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்  மழை   இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்து வருகிறது.

News image
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
Updated On :7 ஜூலை 2022, 3:24 am

DIN

மேட்டூர்: காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்  மழை   இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்து வருகிறது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 257 நாட்களுக்குப் பிறகு 100 அடிக்கு கீழே சரிகிறது. கடந்த ஆண்டு காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வந்தது. இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. அப்போது முதல் இன்று வரை அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் நீடித்து வருகிறது.

இன்று 257வது நாளாகஅணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் உள்ளது. தற்போது காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2049 கன அடியாக குறைந்து போனது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்த நிலையில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு கூடுதலாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. இதனால் இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 100.27 அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 65.19 டிஎம்சியாக உள்ளது.

நீர்வரத்து சரிந்த நிலையில் தொடர்ந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதால் 257 நாள்களுக்கு பிறகு இன்று பிற்பகலில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழே சரியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.