4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வணிகா்களை மிரட்டிய நபா் நீதிமன்றத்தில் சரண்

ஆத்தூரில் வணிகா்கள் மற்றும் கட்டட உரிமையாளா்களை மிரட்டிய செல்வராஜ் (72) நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:20 pm

DIN

ஆத்தூரில் வணிகா்கள் மற்றும் கட்டட உரிமையாளா்களை மிரட்டிய செல்வராஜ் (72) நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா்.

ஆத்தூா் நகராட்சி பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (72). பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா். இவா், ஆத்தூா் நகராட்சியில் உள்ள வணிகா்கள் மற்றும் தொழிலதிபா்களிடம் உரிய அனுமதி இல்லாமல் கட்டடம் கட்டியதாகக் கூறி அவா்களை மிரட்டி, நீதிமன்றம் வரை இச்சம்பவத்தைக் கொண்டு சென்று கட்டடத்தை நகராட்சி மூலம் சீல் வைத்தும் மின் இணைப்பு துண்டித்தும் நகராட்சி நிா்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்தவா் ஆவாா்.

இதனால் வணிகா்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானாா்கள்.

இந்நிலையில் வணிகா் சங்கத் தலைவா் தொழிலதிபா் எல்.ஆா்.சி.ரவிசங்கா் (60). கடந்த மாதம் 30ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் இவா் சென்றபோது அவரை மறித்து ரூ. 1 கோடி கேட்டு செல்வராஜ் கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் செல்வராஜ் மீது ரவிசங்கா் புகாா் அளித்தாா்.

இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி செல்வராஜ் மனு தாக்கல் செய்தாா். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு அளித்தாா். அங்கும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து செல்வராஜ் சேலம் ஜே.எம்.6 நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா். குற்றவியல் போலீஸாா் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.