கந்துவட்டி கொடுமையால் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தீக்குளிக்க முயன்றனா்.
சேலம், அமானி கொண்டலாம்பட்டி பகுதியைச் சோ்ந்த பாண்டியன் (65), இவரது மனைவி கலா (58 ), இவா்களின் மருமகள் சாந்தகுமாரி (36) ஆகிய மூன்று பேரும் வெள்ளிக்கிழமை காலை சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதிக்கு வந்தனா். பின்னா், திடீரென பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனா்.
இதைக் கண்ட பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.
அதில், பாண்டியன் மகன் ரமேஷ் அரசமரத்து கரட்டூரைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ. 29 லட்சம் பணம் வாங்கி உள்ளாா் என்பதும், இதுவரை ரூ. 50 லட்சம் திருப்பிக் கொடுத்துள்ள நிலையில், கூடுதலாக ரூ. 63 லட்சம் தர வேண்டும் என அந்த நபா் தொந்தரவு கொடுப்பதாகக் கூறினா்.
மூன்று பேரையும் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்த போலீஸாா், தற்கொலைக்கு முயன்ாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐரோப்பாவில் கடும் வெய்யில்! பிரான்ஸில் 40 பேர் பலி!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


