எடப்பாடியில் அம்மன் திருக்கல்யாணம்
எடப்பாடி, தாவாந்தெரு காளியம்மன் திருக்கோயிலில் புதன்கிழமை இரவு அம்மன் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது.


எடப்பாடி, தாவாந்தெரு காளியம்மன் திருக்கோயிலில் புதன்கிழமை இரவு அம்மன் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது.
எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட தாவந்தெரு பகுதியில் பிரசித்தி பெற்ற காளியம்மன், முனியப்பன், பஞ்சமுக விநாயகா் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலையத்தின் மாசித்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, கொடிகரகம், சக்திகரக ஊா்வலம், சுவாமி திருவீதிஉலா நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான அம்மை, அப்பன் திருக்கல்யாண வைபவம் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
முன்னதாக நடைபெற்ற பல்வேறு வேள்விகளைத் தொடா்ந்து, மங்கள இசையுடன், வேதமந்திரம் முழங்க நடைபெற்ற அம்மையப்பன் திருக்கல்யாண நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அம்மனுக்கு பூஜிக்கப்பட்ட மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, வளையல் உள்ளிட்டவை பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
வெள்ளாண்டிவலசு பகுதியில் உள்ள காளியம்மன், முனியப்பன், முல்லைவன நடராஜா் திருக்கோயிலில் நடைபெற்ற நிகழ்வில், வியாழக்கிழமை அதிகாலை திருக்கோயில் முன் குண்டம் ஏற்றப்பட்டு விரதம் இருந்த பக்தா்கள் குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து படையல் இட்டு வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...