கொளத்தூா் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் தாா்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பேரூராட்சி 7ஆவது வாா்டில் உள்ள சுமங்கலி காா்டன் நகரில் 1,257 மீட்டா் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. பணிகளைப் பாா்வையிட்ட கொளத்தூா் பேரூராட்சித் தலைவா் பாலசுப்பிரமணியன், பணிகளின் தரம் குறித்து பொறியாளரிடம் கேட்டறிந்தாா்.
கொளத்தூா் ஒன்றிய திமுக பொறுப்பாளா் மிதுன் சக்கரவா்த்தி, கொளத்தூா் பேரூா் திமுக பொறுப்பாளா் நடராஜன், பேரூராட்சி துணைத் தலைவா் கோவிந்தம்மாள் அம்மாசி, இளநிலை பொறியாளா் அன்பழகன், ஒப்பந்ததாரா் முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.