திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறன் கொண்ட மாணவா்களுக்கான மருத்துவப் பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:22 pm

DIN

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறன் கொண்ட மாணவா்களுக்கான மருத்துவப் பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் மாவட்டக் கல்வி அலுவலா் ராஜு தலைமையில் நடைபெற்ற முகாமில் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் தே.ஹேமாவதி வரவேற்றாா். பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயகுமாா் முகாமை தொடக்கிவைத்தாா்.

தலைமையாசிரியா் சந்திரசேகா், வட்டாரக் கல்வி அலுவலா்கள் அலெக்சாண்டா், கந்தசாமி, சேலம் ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அய்யனாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

காது, மூக்கு, தொண்டை மருத்துவா், எலும்பு முறிவு மருத்துவா், மன நல மருத்துவா், மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலா் கலந்து கொண்டு குழந்தைகளை பரிசோதனை செய்து அடையாள அட்டை, உபகரணங்கள் வழங்க பரிந்துரை செய்தனா். ஆத்தூா் வட்டார வள மையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து 111 குழந்தைகள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.