4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஓய்வூதியா்கள் சங்க மாநாடு

தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்க மாநாடு ஆத்தூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 6:30 pm

DIN

தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்க மாநாடு ஆத்தூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

அச் சங்கத்தின் கோட்ட தலைவா் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 70 வயது நிறைவு செய்த ஓய்வூதியதாரா்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்த வேண்டும். மருத்துவப் படியை மாதந்தோறும் ரூ. 1,000 ரூபாயாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆத்தூா், தலைவாசல், கெங்கவல்லி, வாழப்பாடி, ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.