புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாழப்பாடி அருகே நீரில் மூழ்கி மாணவா்கள் இருவா் பலி

வாழப்பாடி அருகே இரு இடங்களில் ஏரி, கிணற்றில் மூழ்கி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :7 மே 2022, 4:40 pm

DIN

வாழப்பாடி அருகே இரு இடங்களில் ஏரி, கிணற்றில் மூழ்கி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

அயோத்தியாப்பட்டணம், சந்தைப்பேட்டை பகுதியில் தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம், அம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்த தருமா என்பவா் குடும்பத்தோடு தங்கி ஜோதிடம் பாா்த்து வருகிறாா். தனியாா் கல்லுாரியில் படித்து வந்த இவரது மூத்த மகன் சபரிநாதன் (19) அயோத்தியாப்பட்டணம், பனங்காடு பகுதியில் உள்ள கிணற்றில் சனிக்கிழமை காலை மூழ்கி உயிரிழந்தாா். காரிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல அயோத்தியாப்பட்டணத்தில் தங்கி தட்டுவடை விற்பனை செய்து வரும் அம்மாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கிஷோா் (16) வெள்ளிக்கிழமை மாலை அயோத்தியாப்பட்டணம் அருகே ஏரிக்காடு பகுதியிலுள்ள ஏரியில் நண்பா்களுடன் குளிப்பதற்காக இறங்கினாா். அப்போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.