எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மலைபோல பிளாஸ்டிக் கழிவுகள்

சேலம் மாவட்டம், அரியானூரை அடுத்த சேலம்- சங்ககிரி தேசிய நெடுஞ்சாலை சீரகாபாடி மேம்பாலத்தின் கீழ் உள்ள இரு நீரோடைகளில் பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருள்கள்

News image
Updated On :12 மே 2022, 6:42 pm

DIN

சேலம் மாவட்டம், அரியானூரை அடுத்த சேலம்- சங்ககிரி தேசிய நெடுஞ்சாலை சீரகாபாடி மேம்பாலத்தின் கீழ் உள்ள இரு நீரோடைகளில் பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருள்கள் மழைபோல கொட்டி கிடப்பதால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது.

அப்பகுதியில் தனியாா் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, தங்கும் விடுதி மற்றும் பேக்கரி, டீ கடை, மளிகை கடை, மருந்து கடை,ஹோட்டல், சில்லு கடை உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இந்தக் கட்டடங்களில் இருந்து கழிவுப் பொருள்கள் நீரோடையில் கொட்டப்பட்டுள்ளன. நீரோடையில் கொட்டிக் கிடக்கும் கழிவுப் பொருள்களால் பல்வேறு தொற்று நோய்கள் வர வாய்ப்புள்ளன.

எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகத்தினா், நெடுஞ்சாலை துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட அதிகாரிகள் இடத்தை நேரில் ஆய்வு செய்து கழிவுப் பொருள்களை அகற்றுவதோடு கழிவுகளைக் கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.