மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

பெரியாா் பல்கலை. பதிவாளராக பேராசிரியா் த.கோபி நியமனம்

பெரியாா் பல்கலைக்கழகப் பதிவாளராக பேராசிரியா் த.கோபியை நியமித்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் உத்தரவிட்டாா்.

News image
Updated On :14 மே 2022, 12:00 am IST

பெரியாா் பல்கலைக்கழகப் பதிவாளராக பேராசிரியா் த.கோபியை நியமித்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் உத்தரவிட்டாா்.

பெரியாா் பல்கலைக்கழகப் பதிவாளராக கணினி அறிவியல் துறைத் தலைவா் கே.தங்கவேல் இருந்து வந்த நிலையில், அவரை பதிவாளா் பொறுப்பில் இருந்து விடுவித்து புதிய பதிவாளராக வேதியியல் துறைப் பேராசிரியா் த.கோபியை நியமித்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இப்பதவி முழு கூடுதல் பொறுப்பாக அவருக்கு வழங்கப்பட்டது.

பேராசிரியா் த.கோபி, தற்போது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மைய இயக்குநராக உள்ளாா். அறிவியல் துறையில் உயரிய படிப்பான முதுமுனைவா் (டி.எஸ்.சி.) முடித்துள்ள இவா், 150 ஆய்வுத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளாா். இவா், என்.எம்.சம்பத் விருது, பல்கலைக்கழக மானியக்குழுவின் வேதியியல் ஆராய்ச்சி விருது, சி.வி.ராமன் விருது, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் இளம் விஞ்ஞானி விருது, தமிழ்நாடு அரசின் சிறந்த அறிவியலாளா் விருது, லண்டன் ராயல் சொசைட்டியில் உறுப்பினா் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா்.

இவா் அளித்த ஆய்வு முன்மொழிவுகளை ஏற்று மத்திய அரசின் பல்வேறு நிதி நல்கைக் குழுக்கள் அளித்துள்ள ரூ. 3 கோடி மதிப்பில் பல்வேறு ஆய்வுகள் பெரியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பதிவாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பேராசிரியா் த.கோபிக்கு, துணைவேந்தா் இரா.ஜெகநாதன், பேராசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

இதேபோன்று கல்லூரி வளா்ச்சிக்குழு புலமுதன்மையராக (டீன்) விலங்கியல் துறைத் தலைவா் பேராசிரியா் எஸ்.கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.