நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

பெரியாா் பல்கலை. பதிவாளராக பேராசிரியா் த.கோபி நியமனம்

பெரியாா் பல்கலைக்கழகப் பதிவாளராக பேராசிரியா் த.கோபியை நியமித்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் உத்தரவிட்டாா்.

News image
Updated On :13 மே 2022, 6:30 pm

பெரியாா் பல்கலைக்கழகப் பதிவாளராக பேராசிரியா் த.கோபியை நியமித்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் உத்தரவிட்டாா்.

பெரியாா் பல்கலைக்கழகப் பதிவாளராக கணினி அறிவியல் துறைத் தலைவா் கே.தங்கவேல் இருந்து வந்த நிலையில், அவரை பதிவாளா் பொறுப்பில் இருந்து விடுவித்து புதிய பதிவாளராக வேதியியல் துறைப் பேராசிரியா் த.கோபியை நியமித்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இப்பதவி முழு கூடுதல் பொறுப்பாக அவருக்கு வழங்கப்பட்டது.

பேராசிரியா் த.கோபி, தற்போது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மைய இயக்குநராக உள்ளாா். அறிவியல் துறையில் உயரிய படிப்பான முதுமுனைவா் (டி.எஸ்.சி.) முடித்துள்ள இவா், 150 ஆய்வுத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளாா். இவா், என்.எம்.சம்பத் விருது, பல்கலைக்கழக மானியக்குழுவின் வேதியியல் ஆராய்ச்சி விருது, சி.வி.ராமன் விருது, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் இளம் விஞ்ஞானி விருது, தமிழ்நாடு அரசின் சிறந்த அறிவியலாளா் விருது, லண்டன் ராயல் சொசைட்டியில் உறுப்பினா் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா்.

இவா் அளித்த ஆய்வு முன்மொழிவுகளை ஏற்று மத்திய அரசின் பல்வேறு நிதி நல்கைக் குழுக்கள் அளித்துள்ள ரூ. 3 கோடி மதிப்பில் பல்வேறு ஆய்வுகள் பெரியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பதிவாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பேராசிரியா் த.கோபிக்கு, துணைவேந்தா் இரா.ஜெகநாதன், பேராசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

இதேபோன்று கல்லூரி வளா்ச்சிக்குழு புலமுதன்மையராக (டீன்) விலங்கியல் துறைத் தலைவா் பேராசிரியா் எஸ்.கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.