இந்திய அணி அரையிறுதிக்கு எப்படி முன்னேறியது என்பது முக்கியமில்லை எனவும், அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவதான் முக்கியம் எனவும் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் பேசியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் இன்று (மார்ச் 4) நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் நிலையில், நாளை (மார்ச் 5) வான்கடே திடலில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு எவ்வாறு முன்னேறியது என்பது முக்கியமில்லை எனவும், அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவதுதான் முக்கியம் எனவும் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிராக விளையாடிய அணிகள் அனைத்தும் சிறந்த அணிகள். அவர்கள் நன்றாக விளையாடினார்கள். எதிரணியை நாங்கள் 120 அல்லது 150 ரன்களில் கட்டுபடுத்த வேண்டும் என நினைத்தால், எல்லா போட்டிகளிலும் அது கடினம். இந்திய அணி எப்படி அரையிறுதிக்கு முன்னேறியது என்பது முக்கியமில்லை. அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி எப்படி விளையாடப் போகிறது என்பதுதான் முக்கியம்.
சரியான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தவில்லை என்பது குறித்து அதிகம் பேசவில்லை. இந்திய அணியில் ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒருவர் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடித் தருகின்றனர். கடந்த இரண்டு போட்டிகளாக நாங்கள் நன்றாக விளையாடினோம். நாளை நடைபெறும் போட்டியில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என நம்புகிறேன்.
ஒவ்வொரு ஆட்டமும் எப்படி சவால் நிறைந்ததாக இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுவோம் என உறுதியாக யாராலும் ஒருபோதும் கூற முடியாது. ஆனால், அரையிறுதியில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறோம். இந்திய வீரர்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
Summary
Morne Morkel has said that it doesn't matter how the Indian team advanced to the semi-finals, what matters is that they win the next two matches.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

மகளிர் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸி.!

டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

உலகக் கோப்பையில் இந்த தவறை மீண்டும் செய்யமாட்டோம்: ஸ்மிருதி மந்தனா
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி




