மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகத் தகவல்...

News image
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் (கோப்புப் படம்)- ANI
Updated On :4 மார்ச் 2026, 3:06 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என ஐக்கிய ஜனதா தளத்தின் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

பிகார் முதல்வரின் இல்லத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயல்தலைவர் சஞ்சய் ஜா மற்றும் அமைச்சர் விஜய் குமார் சௌதரி ஆகியோருடன் புதன்கிழமை (மார்ச் 4) நடைபெற்ற ஆலோசனையில் இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிகாரில் கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றது. இதன்மூலம், நிதீஷ் குமார் மீண்டும் பிகாரின் முதல்வராகப் பதவியேற்றார்.

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகிப்பது குறித்து முதல்வர் நிதீஷ் குமார்தான் முடிவு செய்ய வேண்டுமென ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டப் பேரவை மேலவை உறுப்பினர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.

இத்துடன், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்பதற்காக தனது முதல்வர் பதவியை நிதீஷ் குமார் விரைவில் ராஜிநாமா செய்யவுள்ளதாகவும், நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் சட்டப் பேரவையின் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு பிகாரின் துணை முதல்வராகப் பதவியேற்கவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நாட்டின் 10 மாநிலங்களை உள்ளடக்கிய 37 உறுப்பினர்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் மார்ச் 16 அன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Reports have emerged that Bihar Chief Minister Nitish Kumar will be elected as a member of the Rajya Sabha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.