கடந்த 3 ஆண்டுகளில் மேற்கு வங்கம் மாநிலத்தில்தான் அதிக முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
மேற்கு வங்கத்தில், நிகழாண்டில் (2026) சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதால், ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன.
இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் நாட்டிலுள்ள பிற மாநிலங்களை விடவும் மேற்கு வங்கத்தில்தான் அதிக முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக, அம்மாநில பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சமிக் பட்டாச்சார்யா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபற்றி, புதன்கிழமை (மார்ச் 4) செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
“முஸ்லிம் சமுதாய மக்களிடம் நான் கோரிக்கை விடுக்கிறேன். மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையை பாஜக ஆளும் குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடுங்கள். பாஜக ஆளும் மாநிலங்களை விடவும் மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், பல்வேறு சமயங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் உறுப்பினர்கள் அக்கட்சியின் மற்ற உறுப்பினர்களால் கொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் சமிக் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
Summary
The BJP has alleged that the state of West Bengal has witnessed the highest number of Muslims being killed in the last 3 years.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி உருவாக்கிய சிலையை அகற்றிய பாஜக அரசு!

பாஜகவின் சித்தாந்தத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது: நிதின் கட்கரி

மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
மேற்கு வங்கத்தில் வரலாறு படைக்கும் பாஜக! முதல்முறையாக ஆட்சியமைக்கிறது!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




