டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

4 ஆவது நாளாக..! மே.வங்கத்தின் அரசு அலுவலகங்களுக்கு சயனைடு வெடிகுண்டு மிரட்டல்!

மேற்கு வங்கத்தின் பல்வேறு அரசு அலுவலகங்கள், தபால் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்...

News image
கோப்புப் படம்
Updated On :27 பிப்ரவரி 2026, 4:23 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தபால் நிலையங்கள், கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலத்தின் ஹூக்லி, பாஸ்கிம் பர்தமான், பாங்குரா மற்றும் ஹவுரா ஆகிய மாவட்டங்களின் முக்கிய தபால் நிலையங்கள் மற்றும் அதனோடு அமைந்துள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கும் வெள்ளிக்கிழமை (பிப். 27) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாள்களாக மேற்கு வங்கம் மாநிலத்தின் நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்தன.

ஆனால், அவை அனைத்தும் நிர்வாகத்தின் தயார்நிலைக்கு வைக்கப்பட்ட சோதனை எனவும், உண்மையான தாக்குதல் வெள்ளிக்கிழமைதான் நடைபெறவுள்ளது எனவும் மின்னஞ்சல் மூலம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மர்ம நபர்கள் அனுப்பிய மின்னஞ்சலில், சயனைடு வாயு நிரப்பிய ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு மதியம் 12.10 மணிக்கு வெடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, மிரட்டல் விடுக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களின் தலைமைத் தபால் அலுவலகங்களிலிருந்த அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

பின்னர், அங்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் அலுவலகங்களின் வளாகங்கள் முழுவதும் சோதனைகள் மேற்கொண்டனர். இந்தச் சோதனைகளின் முடிவில், சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காததினால் இந்த மிரட்டல்களும் போலியானவை என உறுதி செய்யப்பட்டன.

இருப்பினும், ஒரே நேரத்தில் பல்வேறு மாவட்டங்களின் அரசு அலுவலகங்களுக்கு இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால், அரசுப்பணிகள் பாதிக்கப்பட்டதுடன் அங்கு பதற்றமான சூழல் நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.