திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பஞ்சாபின் மொஹாலியில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பஞ்சாபில் ஒரே நாளில் 16 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து...

News image

வெடிகுண்டு மிரட்டல் (கோப்புப் படம்) - IANS

Updated On :11 பிப்ரவரி 2026, 4:50 pm IST

பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி மாவட்டத்தில், ஒரே நாளில் 16 தனியார் பள்ளிகளுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

மொஹாலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள 16 தனியார் பள்ளிகளுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புதன்கிழமை (பிப். 11) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பள்ளிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளிகப்பட்டது. காவல் துறையினரின் அறிவுறுத்தலின்படி அந்தப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்தப் பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சோதனைகளின் முடிவில், 16 பள்ளிகளின் வளாகங்களில் சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருள்களும் கிடைக்காததால் இந்த மிரட்டல்கள் அனைத்தும் போலியானவை என உறுதி செய்யப்பட்டன.

இந்தச் சோதனை நடவடிக்கைகளில் 300-க்கும் அதிகமான காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டதாகவும், மிரட்டல் விடுத்த மர்ம நபர்களைப் பிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மொஹாலி காவல் துறை உயர் அதிகாரி ஹர்மந்தீப் சிங் ஹான்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

In Mohali district of Punjab, unidentified assailants issued bomb threats to 16 private schools in a single day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.