திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

6 ஆண்டுகளில் 39 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல்: மத்திய உள்துறை அமைச்சகம்

நாடு முழுவதும் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 39 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தகவல்

News image

போதைப் பொருள் - ENS

Updated On :11 பிப்ரவரி 2026, 4:27 pm IST

நாடு முழுவதும் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 39 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 2020 முதல் 2025 நவம்பர் வரையில், 38.89 லட்சம் கிலோ கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2020-ல் 5.88 லட்சம் கிலோ போதைப் பொருள்களும், அதிகபட்சமாக 2021-ல் 8.16 லட்சம் கிலோ, 2022-ல் 7.22 லட்சம் கிலோ, 2023-ல் 6.32 லட்சம் கிலோ, 2024-ல் 5.4 லட்சம் கிலோ என்று குறைந்த நிலையில், மீண்டும் 2025-ல் 5.89 லட்சம் கிலோவாக அதிகரித்தது.

கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்களில் ஒடிஸா முதலிடத்தில் உள்ளது. ஒடிஸாவில் மட்டும் 6 ஆண்டுகளில் 10.65 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 27 சதவிகிதத்துக்கும் அதிகம்.

மேலும், ராஜஸ்தானில் 2020-ல் 14,826 கிலோ பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2025-ல் 58,146 கிலோவாக உயர்ந்தது. மேற்கு வங்கத்திலும் 2020-ல் 25,979 கிலோ என்ற நிலையிலிருந்து, 2025-ல் 32,456 கிலோ என்ற அதிகரித்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் 2021-ல் 2.01 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதிலிருந்து, 2025-ல் 44,182 கிலோவாக கணிசமாகக் குறைந்துள்ளது.

தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டவிரோத போதைப்பொருள் தடைச் சட்டத்தின்கீழ் எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. மேலும், நாடுகடந்த போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க, அண்டை நாடுகள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களுடனான சர்வதேச ஒத்துழைப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

Summary

39 lakh kg cannabis based drugs seized across India since 2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.