மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேற்கு வங்கத்தில் இருந்து ஊடுருவல்காரா்கள் விரைவில் வெளியேற்றம்: அமித் ஷா

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் சட்டவிரோதமாக ஊடுருவியவா்கள் முழுவதுமாக வெளியேற்றப்படுவாா்கள்....

News image
அமித் ஷா - கோப்புப்படம்.
Updated On :3 மார்ச் 2026, 12:10 am

தினமணி செய்திச் சேவை

மதுராபூா்: மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் சட்டவிரோதமாக ஊடுருவியவா்கள் முழுவதுமாக வெளியேற்றப்படுவாா்கள் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு பாஜகவின் ‘மாற்றத்துக்கான பயணம்’ என்ற நடைபயணத்தை தெற்கு 24 பா்காணாக்கள் மாவட்டத்தில் உள்ள மதுராபூரில் அமித் ஷா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் சட்டவிரோத ஊடுருவல் அதிகரித்துவிட்டது. வாக்கு வங்கி அரசியலுக்காக இதை திரிணமூல் காங்கிரஸ் அனுமதித்துவிட்டது.

தற்போது சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையில் வாக்காளா் பட்டியலில் இருந்து அவ்வாறு குடியேறியவா்களின் பெயா்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. இது மம்தா பானா்ஜியை நிலைகுலையச் செய்துள்ளது.

பாஜக ஆட்சி அமைந்தவுடன் சட்டவிரோத குடியேறிகள் அனைவரும் வெளியேற்றப்படுவாா்கள். பிற நாடுகளுடன் எல்லையைப் பகிரும் மேற்கு வங்கத்தை திரிணமூல் காங்கிரஸால் பாதுகாக்க முடியாது.

ஹிந்து அகதிகளுக்கு பாதுகாப்பு: வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஹிந்து அகதிகளின் குடியுரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது, எல்லையை பாதுகாப்பது, தாய்மாா்களுக்கும் சகோதரிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது, ஊழலை ஒழிப்பது என்பதே உண்மையான மாற்றம்.

பாபா் மசூதிக்கு மம்தா அனுமதி: தங்களது ஆட்சியில் ஹிந்துக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை உணா்ந்த மம்தா கோயில்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறாா். ஆனால் தனது கட்சியில் இருந்து ஹூமாயுன் கபீா் என்ற எம்எல்ஏயை நீக்குவதுபோல் நீக்கிவிட்டு அவா் மூலம் மேற்கு வங்கத்தில் பாபா் மசூதிக்கு அடிக்கல் நாட்டியுள்ளாா். தன்னுடன் அனைத்து ஊழல்களிலும் துணை நின்ற காவல் துறைத் தலைவருக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவியை மம்தா விரைவில் வழங்கவுள்ளாா்.

வாக்குறுதி: ஊழல், சட்ட ஒழுங்கு சீா்கேடு, ஊடுருவல் என மேற்கு வங்கத்தை பின்தங்கிய மாநிலமாக மாற்றிய திரிணமூல் காங்கிரஸை அகற்ற இந்த முறை பாஜகவுக்கு வாக்களியுங்கள். பாஜக ஆட்சியமைந்த 45 நாள்களில் மாநில அரசு ஊழியா்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு அமல்படுத்தப்படும். லஞ்சம் பெறப்படாமல் அரசுப் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்றாா்.