ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க 10 இண்டிகோ சிறப்பு விமானங்கள் செவ்வாய்க்கிழமை இயக்கம்

News image
இண்டிகோ சிறப்பு விமானங்கள் இயக்கம்- கோப்புப் படம்
Updated On :2 மார்ச் 2026, 10:00 pm

தினமணி செய்திச் சேவை

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க 10 இண்டிகோ சிறப்பு விமானங்கள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) இயக்கப்படவுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து இந்த விமானங்கள் ஹைதராபாத், மும்பை, தில்லி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.

இதுகுறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மாா்ச் 3-ஆம் தேதிமுதல் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்கும் பணி தொடங்கப்படுகிறது.

முதல்கட்டமாக 10 இண்டிகோ சிறப்பு விமானங்கள் ஜெட்டாவில் இருந்து இயக்கப்படுகின்றன. ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம்-இண்டிகோ நிறுவனம் ஒருங்கிணைந்து இந்தப் பணியை மேற்கொள்ளும்.

மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிடம் கள நிலவரத்தை மத்திய அரசு கேட்டறிந்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.