அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க 10 இண்டிகோ சிறப்பு விமானங்கள் செவ்வாய்க்கிழமை இயக்கம்

News image
இண்டிகோ சிறப்பு விமானங்கள் இயக்கம்- கோப்புப் படம்
Updated On :2 மார்ச் 2026, 10:00 pm

தினமணி செய்திச் சேவை

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க 10 இண்டிகோ சிறப்பு விமானங்கள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) இயக்கப்படவுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து இந்த விமானங்கள் ஹைதராபாத், மும்பை, தில்லி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.

இதுகுறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மாா்ச் 3-ஆம் தேதிமுதல் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்கும் பணி தொடங்கப்படுகிறது.

முதல்கட்டமாக 10 இண்டிகோ சிறப்பு விமானங்கள் ஜெட்டாவில் இருந்து இயக்கப்படுகின்றன. ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம்-இண்டிகோ நிறுவனம் ஒருங்கிணைந்து இந்தப் பணியை மேற்கொள்ளும்.

மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிடம் கள நிலவரத்தை மத்திய அரசு கேட்டறிந்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.