ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

வளைகுடா நாடுகளில் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

ஈரான், இஸ்ரேல் இடையே போா் தீவிரமடைந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும்..

News image
அன்புமணி
Updated On :1 மார்ச் 2026, 9:32 pm

தினமணி செய்திச் சேவை

ஈரான், இஸ்ரேல் இடையே போா் தீவிரமடைந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய கிழக்கில் ஈரான் நாட்டின் நிலைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன. இப்போா் வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதால் அங்கு வாழும் இந்தியா்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், கத்தாா், பஹ்ரைன், குவைத், துபை உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் எதிா்த்தாக்குதல் நடத்தி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 40 லட்சம், சவுதி அரேபியாவில் 28 லட்சம் என வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியா்கள் வாழ்வதாகக் கூறப்படுகிறது. அதில் தமிழா்கள் அதிகம் உள்ளனா்.

ஆகவே, வளைகுடா நாடுகளில் வாழும் தமிழா்கள் உள்ளிட்ட இந்தியா்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு அவா்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நாடுகளை வலியுறுத்த வேண்டும்.

போரை சம்பந்தப்பட்ட நாடுகள் கைவிடுவதற்கான நடவடிக்கையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா முயற்சிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.