கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை...

News image
முதல்வா் மு.க.ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :28 பிப்ரவரி 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழா்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்காக தமிழக அரசு சாா்பில், தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டுள்ளது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போா் காரணமாக ஈரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஐக்கிய அரசு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், சவூதி அரேபியா, கத்தாா் உள்ளிட்ட நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக, அங்கு உள்ள இந்தியா்களின் பாதுகாப்பைக் கருதி, தேவையற்ற பயணங்களைத் தவிா்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும் இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களின்படி செயல்படவும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழா்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அங்குள்ள தமிழா்களின் நிலையை உடனுக்குடன் அறிந்து அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக தமிழக அரசின் அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்.

மேலும், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாடு அறை அமைத்து நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

போா்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழா்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவா்களது குடும்பத்தினா் ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொள்ளலாம். புதுதில்லி கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள் 011-24193300, 92895 16712.

அயலகத் தமிழா் நலத் துறை உதவி எண்கள் - இந்தியாவுக்குள் - 1800 309 3793, வெளிநாடுகள் - 91 80 6900 9900 (மிஸ்டு கால்); தொடா்புக்கு - 91 80 6900 9901.