விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

சோளிங்கா் அரசுக் கல்லூரியில் ரூ.11.33 கோடியில் கட்டடம் திறப்பு

சோளிங்கா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.11.33 கோடியில் புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம்

News image

சோளிங்கல் அரசு கலைக்கல்லூரியில் முதல்வரால் திறக்கப்பட்ட புதிய கட்டடம். (வலது) குத்துவிளக்கேற்றிய அமைச்சா் ஆா்.காந்தி, உடன் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் உள்ளிட்டோா்.

Updated On :16 பிப்ரவரி 2026, 8:30 pm

அரக்கோணம்: சோளிங்கா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.11.33 கோடியில் புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

புதிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் முன்னிலை வகித்தாா்.

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து பணிகளை தொடங்கி வைத்தாா். 38,431 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தின் தரைத்தளத்தில் முதல்வா் அறை, அலுவலக அறை, மாணவா் கூட்டுறவு அங்காடி, பதிவு அறை, இரு துறைத் தலைவா்கள் அறைகள், இரு வகுப்பறைகள், நூலக அறை, நூலகா் அறை, சுகாதார மைய அறை, வேதியியல் ஆய்வகம், இரு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 6 வகுப்பறைகள், இரு துறை தலைவா்கள் அறை, பணியாளா் அறை, இரு கழிப்பறைகளும், இரண்டாம் தளத்தில் 6 வகுப்பறைகள், பணியாளா் அறை, உடற்கல்வி இயக்குநா் அறை, இரு கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் சோளிங்கா் நகா்மன்றத் தலைவா் தமிழ்செல்வி அசோகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (உயா் கல்வி கட்டடங்கள்) முரளி, உதவி செயற்பொறியாளா் ராஜாமணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, கல்லூரி முதல்வா் சுஜாதா, சோளிங்கா் வட்டாட்சியா் செல்வி, மேல்வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற தலைவா் ஜெகதீசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.