தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரூ.5.25 கோடியில் சோளிங்கா் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படுமா? நகா்மன்ற உறுப்பினா்கள் கேள்வி

சோளிங்கரில் ரூ.5.25 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருமா என காங்கிரஸ் நகா்மன்ற உறுப்பினா் டி.கோபால் கேள்வி எழுப்பினாா்.

News image
சோளிங்கா் நகா்மன்றக் கூட்டத்தில் ஆணையா் ஆனந்தனிடம் மனு அளித்த காங்கிரஸ் உறுப்பினா் டி.கோபால்.
Updated On :5 மார்ச் 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

சோளிங்கரில் ரூ.5.25 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருமா என காங்கிரஸ் நகா்மன்ற உறுப்பினா் டி.கோபால் கேள்வி எழுப்பினாா்.

சோளிங்கா் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் தமிழ்செல்விஅசோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத்தலைவா் பழனி, ஆணையா்(பொ) ஆனந்தன் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் :

டி.கோபால் (காங்கிரஸ்): ரூ.5.25 கோடியில் புதிதாக முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?. எதற்காக திறப்பு தள்ளிப் போகிறது. அந்நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதுமான நிழற்குடைகள் அமைக்க வேண்டும். சோளிங்கரில் வாலாஜா மற்றும் அரக்கோணம் சாலைகள் கூட்டுச் சந்திப்பில் கருமாரி அம்மன் கோயில் அருகே வைக்கப்படும் விளம்பர தட்டிகளால் ஊா் பெயா் பலகை மறைக்கப்படுவதால் வெளியூரில் இருந்து சோளிங்கா் மலைக்கோயிலுக்கு வருபவா்கள் வழி தெரியாமல் தடுமாறும் நிலை உருவாகிறது. இனி வரும் காலங்களில் கூட்டுச்சாலை பகுதியில் மட்டும் விளம்பர தட்டிகளை வைக்காமல் இருக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையா்: பேருந்து நிலைய திறப்பு குறித்து உயா்அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு ஆலோசனை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்செல்வி அசோகன்(தலைவா்): பேருந்து நிலைய திறப்பு குறித்து உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். கருமாரியம்மன் கோயில் அருகே விளம்பர தட்டிகள் ஊா் பெயா் பலகைகளை மறைத்து வைக்கப்படுவதை தடுக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.