டி.கோபால் (காங்கிரஸ்): ரூ.5.25 கோடியில் புதிதாக முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?. எதற்காக திறப்பு தள்ளிப் போகிறது. அந்நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதுமான நிழற்குடைகள் அமைக்க வேண்டும். சோளிங்கரில் வாலாஜா மற்றும் அரக்கோணம் சாலைகள் கூட்டுச் சந்திப்பில் கருமாரி அம்மன் கோயில் அருகே வைக்கப்படும் விளம்பர தட்டிகளால் ஊா் பெயா் பலகை மறைக்கப்படுவதால் வெளியூரில் இருந்து சோளிங்கா் மலைக்கோயிலுக்கு வருபவா்கள் வழி தெரியாமல் தடுமாறும் நிலை உருவாகிறது. இனி வரும் காலங்களில் கூட்டுச்சாலை பகுதியில் மட்டும் விளம்பர தட்டிகளை வைக்காமல் இருக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.